நீலகிரி மலை
நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்
நீலகிரி மலை
நீலகிரி மலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும் . இது மலைகளின் ராணி என்று சிறப்பிக்கப்படுகிறது . இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும். இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் நீலகிரி என பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும்
மேற்கோள்
1.http://www.tamilpayani.com/tn/thenilgiris/ 2.UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats (sub cluster nomination), retrieved 4/20/2007 World Heritage sites, Nilgiri Sub-Cluster 3. "Collection search: You searched for Nilgiri". British Museum. Retrieved 2016-08-09. 4. Pai, Mohan (15 January 2009). ...and they created little England. The Western Ghats - Hill