சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சாத்த மங்கை
பெயர்:திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் சீயாத்தமங்கை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர்
தாயார்:இருமலர்க் கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:தீர்த்த குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் எனப்படுகிறது.

சிறப்புகள்

  • பிரம்ம தேவர் வழிபட்ட திருத்தலம்
  • நீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியார் மங்கையர்க்கரசி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 227,228

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.