இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்

இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வில்வவனம், சற்குணேசபுரம், மங்களநாயகிபுரம், மணக்கோலநகர்
பெயர்:இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:இடும்பாவனம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சற்குணநாதர்(சற்குணேசுவரர் ,கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்)
தாயார்:மங்களநாயகி(மங்கள வல்லி, கல்யாணேசுவரி)
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்:காமிய ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்மந்தர்

இறைவன், இறைவி

இத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி.

சிறப்புகள்

இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.[1]

வழிபட்டோர்

இக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர்.

தேவாரப்பாடல்

இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:


நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 272

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.