நந்தகம்
நந்தகம் என்பது திருமாலுடைய வாளின் பெயராகும். இந்த ஆயுதம் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக கருதப்பெறுகிறது.[1] ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறார்.[2]

திருமாலின் பின் வலக்கையில் நந்தகம் வாள்
பத்தாந்திருமொழியில் பாடல் 111 ல் நாந்தக மேந்திய நம்பி சரணென்று என்ற வரி வருகிறது. இதற்கு நந்தகம் எனும் வடமொழிச்சொல்லே நாந்தகமாக நீண்டுகிடக்கிறது என ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி தனது உரையில் குறிப்பிடுகிறார். [3]
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.