வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இங்கு வெண்ணந்தூர் ஏரி உள்ளது.
வெண்ணந்தூர்
பழைய பெயர் வெண்ணைநல்லூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
வட்டம் | இராசிபுரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி தலைவர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,568 (2011) • 3,029/km2 (7,845/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4.81 சதுர கிலோமீட்டர்கள் (1.86 sq mi) |
குறியீடுகள்
|
அமைவிடம்
வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு 38 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கிமி தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது.
இதன் கிழக்கே அத்தனூர் 5 கிமீ; மேற்கே ஆட்டையாம்பட்டி 5 கிமீ; வடக்கே மல்லூர் 7 கிமீ மற்றும் தெற்கே சௌதாபுரம் ஊராட்சி 5 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4.81 சகிமீ பரப்பும், பேரூராட்சி மன்ற 15 உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,844 வீடுகளும், 14,568 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- வெண்ணந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- Vennanthur Population Census 2011