எருமைப்பட்டி

எருமைப்பட்டி (ஆங்கிலம்:Erumaipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. இது வேளாண்மை நிறைந்த ஊர் பகுதியாகும்

எருமைப்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் சேந்தமங்கலம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,085 (2011)

737/km2 (1,909/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.4 சதுர கிலோமீட்டர்கள் (6.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/erumapatty

அமைவிடம்

நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் துறையூர் 41 கிமீ; வடக்கில் இராசிபுரம் 45 கிமீ; தெற்கில் தொட்டியம் 29 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

16.4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,954 வீடுகளும், 12,085 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. எருமைப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Erumaipatti Population Census 2011


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.