பரமத்தி ஊராட்சி ஒன்றியம்
பரமத்தி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பரமத்தி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரமத்தியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 47,929 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,513 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 59 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- திருத்தனை
- கோலரம்
- கொடச்சேரி
- கொத்தூர்
- குன்னமலை
- மணியனூர்
- மாணிக்கநத்தம்
- மேல்சாத்தம்பூர்
- நடந்தை
- நல்லூர்
- பிள்ளைகளத்தூர்
- பில்லூர்
- பிராந்தகம்
- ராமதேவம்
- சீராப்பள்ளி
- செருக்கலை
- சீத்தம்பூண்டி
- சுங்ககாரம்பட்டி
- வீராணம்பாளையம்
- வில்லிபாளையம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.