எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம்
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் எலச்சிபாளையத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,565 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,887 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 66 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- கவுண்டம்பாளையம்
- கவுண்டம்பாளையம
- அகரம்
- அக்கலாம்பட்டி
- பொம்மம்பட்டி
- சின்னமணலி
- இளநகர்
- இளப்புலி
- கீழப்பாளையம்
- கொக்கலை
- கொன்னையூர்
- கோத்தம்பூண்டி
- குப்பாண்டபாளையம்
- லத்துவாடி
- மானாதி
- மண்டகபாளையம்
- மருக்கலாம்பட்டி
- மாவுரெட்டிப்பட்டி
- மொலிபள்ளி
- முசிறி
- நல்லிப்பாளையம்
- பொக்கம்பாளையம்
- புள்ளகவுண்டம்பட்டி
- புஞ்செய் புதுப்பாளையம்
- புத்தூர் கிழக்கு
- சக்திநாயக்கன்பாளையம்
- தொண்டிபட்டி
- உஞ்சனை
- பெரியமணலி
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.