ஆலம்பாளையம்

ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறத்தில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் [3], காவேரி ரயில் நிலையமும்[4] உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்

ஆலாம்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

20,286 (2011)

1,966/km2 (5,092/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.32 சதுர கிலோமீட்டர்கள் (3.98 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/aalampalayam

அமைவிடம்

ஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கிமீ; மேற்கில் ஈரோடு 7 கிமீ; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,785 வீடுகளும், 20,286 மக்கள்தொகையும் கொண்டது. [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.spbltd.com/aboutus.htm
  4. https://indiarailinfo.com/arrivals/cauvery-cv/6598
  5. ஆலம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Alampalayam Population Census 2011


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.