சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் (Sendamangalam), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும்.
அமைவிடம்
சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 8 கிமீ தொலைவிலும்; தெற்கில் இராசிபுரம் 22 கிமீ தொலைவிலும் உள்ளது. சேந்தமங்கலம் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய ஆறு காவேரி ஆகும். இது சென்னை யிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், பெங்களூரு விலிருந்து 255 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி யிலிருந்து 93 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.8 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,484 வீடுகளும், 19,750 மக்கள்தொகையும் கொண்டது. [2]