குடகன்ன தீசன்
குடகன்ன திஸ்ஸன் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசனொருவனாவான். கி.மு. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை கி.மு. 42 தொடக்கம் கி.மு. 20 வரை இவன் ஆட்சி செய்து வந்தான். இவன் 22 ஆண்டுகள் அரசை ஆண்டு வந்தான். இவன் மகசுழி மகாதீசனின் மகன் ஆவான். இவன் முன் அனுலாதேவி ஆட்சியில் இருந்தாள். இவனுடைய மகன் பட்டிகாபய அபயன் இவனின் பின் ஆட்சியேறினான். இவனால் சில விகாரைகள் அமைக்கப்பட்டதுடன் விவசாயப் பணியிலும் வளர்ச்சியிலும் இவன் ஈடுபட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. [1]
குடகன்ன திஸ்ஸ | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | கிமு 42 - கிமு 20 |
முன்னிருந்தவர் | அனுலாதேவி (அரசி) |
பின்வந்தவர் | பட்டிகாபய அபயன் |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | மகசுழி மகாதிஸ்ஸ |
இவற்றையும் பார்க்க
சான்றுகள்
- இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 112
வெளி இணைப்புக்கள்
குடகன்ன தீசன் விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் அனுலா |
அனுராதபுர அரசன் 42 BC–20 BC |
பின்னர் பட்டிகாபய அபயன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.