சோரநாகன்

சோரநாகன் என்பவன் கி.மு. 62 தொடக்கம் கி.மு. 50 வரை இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசன் ஆவான். இவன் இவனுடைய மைத்துனனான மகசுழி மகாதீசனை தோற்கடித்து ஆட்சிபீடம் ஏறினான். இவனுடைய மருமகன் குட திச்சன் இவனின் பின்பு ஆட்சிபிடம் ஏறினான். இவன் வலகம்பா மன்னனின் மகனாவான். மகசுழி மகாதீசன் காலத்தில் இவன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் நாக எனு பெயர் கொண்ட இவனுக்கு சோர எனும் பெயர்ப்பதமும் சேர்க்கப்பட்டது. இவன் விகாரைகளை அழித்துப் பாவச்செயல்கள் செய்ததாக அறியப்படுகின்றான்.[1]

சோரநாகன்
அனுராதபுர அரசன்
ஆட்சிகி.மு. 62 - கி.மு. 50
முன்னிருந்தவர்மகசுழி மகாதிஸ்ஸ
குட்ட திச்சன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைவலகம்பாகு

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

சான்றுகள்

  1. இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 111

வெளி இணைப்புக்கள்

சோரநாகன்
விசய வம்சம்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
மகசுழி மகாதீசன்
அனுராதபுர அரசர்
கி.மு. 62 கி.மு. 50
பின்னர்
குட திச்சன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.