பாரதர்கள்
பாரதர்கள் (Bhāratas) இருக்கு வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில், விசுவாமித்திரரால் கூறப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த வேத கால இன மக்கள் ஆவார்.[1]
இருக்கு வேதம், மண்டலம் 7, பகுதி 18-இல் கூறப்பட்ட பத்து மன்னர்களின் போரில் பாரதர்களின் தலைவன் சுதாசும் பங்கு கொண்டார். போரில் வெற்றி அடைந்த பாரதர்கள் குருச்சேத்திரம் பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[2]
பாரதர்களின் ஆட்சியாளர்கள் பின்னாட்களில் புருவுடன் இணைந்து, குரு நாட்டை நிறுவினர்.[3]
பிந்தைய வேத கால மகாஜனபத மக்களிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில் பாரதர்கள் வென்றமையால், மகாபாரத இதிகாசம், குரு நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களை பரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கிறது. [4]
பேரரசர் பரதனின் பெயரால் தற்கால இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, பாரத நாடு என்றும் அழைக்கின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Scharfe, Hartmut E. (2006), "Bharat", in Stanley Wolpert, Encyclopedia of India, 1 (A-D), Thomson Gale, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-31512-2
- ORIGINS AND DEVELOPMENT OF THE KURU STATE by Michael Witzel, Harvard University
- National Council of Educational Research and Training, History Text Book, Part 1, India
- Julius Lipner (2010) "Hindus: Their Religious Beliefs and Practices.", p.23
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.