சோழ நாடு
சோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.
சோழ நாடு Chola Nadu | |
---|---|
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | |
நாடு | இந்தியா |
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு, புதுச்சேரி |
மாவட்டம் | காரைக்கால் (புதுச்சேரி) நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி திருவாரூர் அரியலூர் கடலூர் கரூர் பெரம்பலூர் |
Named for | சோழர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,524 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 51,91,035 |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609-614xxx,620xxx |
வாகனப் பதிவு | TN 45,46,48,51,68,82,55,47,50,49. |
மொத்த மாவட்டங்கள் | 10 |
முக்கிய நகரங்கள் | திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை |
இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]
சோழ அரசர்களின் பட்டியல்
அரசன் பெயர் | ஆட்சியாண்டுகள்(கி.பி) | தந்தை | தலைநகரம் |
---|---|---|---|
விசயாலய சோழ வம்சம் | |||
விசயாலய சோழன் | 848-871 | சுராதிராஜன்[2] | தஞ்சாவூர் |
ஆதித்த சோழன் | 871-907 | விசயாலய சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் பராந்தக சோழன் | 907-950 | ஆதித்த சோழன் | தஞ்சாவூர் |
கண்டராதித்த சோழன் | 950-955 | முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
அரிஞ்சய சோழன் | 956-957 | முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் | தஞ்சாவூர் |
இரண்டாம் பராந்தக சோழன் | 957-973 | அரிஞ்சய சோழன் | தஞ்சாவூர் |
ஆதித்த கரிகாலன் | 957-969 | இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் | காஞ்சிபுரம் |
உத்தம சோழன் | 970-985 | கண்டராதித்த சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் இராசராச சோழன் | 985-1014 | இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
முதலாம் இராசேந்திர சோழன் | 1012–1044 | முதலாம் இராசராச சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
முதலாம் இராசாதிராச சோழன் | 1018–1054 | முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசேந்திர சோழன் | 1051–1063 | முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
வீரராசேந்திர சோழன் | 1063–1070 | இரண்டாம் இராசேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
அதிராசேந்திர சோழன் | 1070 | வீரராசேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
சாளுக்கிய சோழர்கள் | |||
முதலாம் குலோத்துங்க சோழன் | 1070–1120 | முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
விக்கிரம சோழன் | 1118–1136 | முதலாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் குலோத்துங்க சோழன் | 1133–1150 | விக்கிரம சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசராச சோழன் | 1146–1163 | இரண்டாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசாதிராச சோழன் | 1163–1178 | இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1173–1218 | இரண்டாம் இராசராச சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராசராச சோழன் | 1216–1256 | மூன்றாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராசேந்திர சோழன் | 1246–1279 | மூன்றாம் இராசராச சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இருப்பிடம்
இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]
கி.பி 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர்.உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.
நதிகள்
கர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.
வேளாண்மை
இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
- "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
- அபிதான சிந்தாமணி.பக்.1611
- புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 269 -
- புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270-
- "History of the Chola Empire or Chola-mandalam". Louis Gerber.
- S. Gajrani (2004). History, Religion and culture of India. Gyan Publishing House. பக். 5. ISBN ISBN 8182050596, ISBN 9788182050594.
- Eugene F. Irschick (1994). DIalogue and history: constructing South India, 1795-1895. University of california Press. பக். 105.