கரண் சிங்
கரண் சிங் (Karan Singh) (9 மார்ச் 1931), ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங்கின் மகன் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகவும்,[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய அரசின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.[2]பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் கஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர்.[3]
கரண் சிங் کرن سنگھ | |
---|---|
![]() | |
கரண் சிங் | |
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு சனவரி 2012 | |
பதவியில் சனவரி 2006 – சனவரி 2012 | |
பதவியில் சனவரி 2000 – சனவரி 2006 | |
பதவியில் நவம்பர் 1996 – ஆகஸ்டு 1999 | |
இந்திய மக்களவை உறுப்பினர் உதம்பூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1967 - 1970 1971 - 1977 1977 - 1980 1980 - 1984 | |
பின்வந்தவர் | கிரிதாரி லால் டோக்ரா |
சுற்றுலா & விமானப் போக்குவரத்து அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1967 - 1973 | |
சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1973 - 1977 | |
கல்வி & பண்பாட்டுத் துறை அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1979 - 1980 | |
அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவர் | |
பதவியில் 1989 - 1990 | |
முன்னவர் | பி. கே. கௌல் |
பின்வந்தவர் | ஆபித் உசைன் |
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஆளுநர் | |
பதவியில் 17 நவம்பர் 1952 – 30 மார்ச் 1965 | |
முன்னவர் | ஹரி சிங் |
பின்வந்தவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஆளுநர் | |
பதவியில் 30 மார்ச் 1965 – 15 மே 1967 | |
முன்னவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்வந்தவர் | பகவான் சகாய் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 9 மார்ச்சு 1931 கேனிஸ், பிரான்சு |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | யசோ இராச்சிய இலக்குமி |
இருப்பிடம் | புதுதில்லி |
சமயம் | இந்து சமயம் |
கையொப்பம் | ![]() |
2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறும் என கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.[4]
இளமையும் கல்வியும்
இராசபுத்திர டோக்ரா வம்சத்தில் பிறந்த கரண் சிங், பள்ளிக் கல்வியை டேராடூனில் உள்ள டூன் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை கஷ்மீர் பல்கலைக்கழகத்திலும், அரசியல் அறிவியலில் முதுநிலை படிப்பு மற்றும் முனைவர் படிப்பை தில்லி பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்.[5]
குடும்பம்
கரண்சிங்கிற்கு யசோ இராச்சிய இலக்குமி எனும் மனைவியும், அஜாத சத்ரு எனும் மகனும், ஜோத்சனா எனும் மகளும் உள்ளனர்.
விருதுகள்
இவரது சீரிய குடியியல் பணியைப் பாராட்டி இந்திய அரசு, 2005இல் பத்ம விபூசன் விருது வழங்கியது.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Dr. Karan Singh Raj Bhawan, Jammu and Kashmir official website.
- Karan echoes Omar, but ‘J&K part of India’, Arun Sharma, Jammu, Sat 23 October 2010, The Indian Express Limited
- பிரிவினைவாதிகளுடன் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கரண் சிங்
- '370 ரத்தால் சாதக அம்சங்கள்'; காங்., மூத்த தலைவர் கரண் சிங் வரவேற்பு
- "Dr. Karan Singh Profile]". Doon School. மூல முகவரியிலிருந்து 2009-09-18 அன்று பரணிடப்பட்டது.
- Padma Vibhushan
- Detailed Profile: Dr. Karan Singh Government of India portal
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
- Dr. Karan Singh's Official Website
- Dr. Karan Singh's Official Facebook Page
- Film: I Believe: Universal Values for a Global Society with Dr. Singh and by Raja Choudhury.
- Genealogy of the ruling chiefs of Jammu and Kashmir
- Proclamation of May 1, 1951 on Jammu & Kashmir Constituent Assembly by Yuvraj (Crown Prince) Karan Singh from the Official website of Government of Jammu and Kashmir, India