சுந்தர்லால் பகுகுணா
சுந்தர்லால் பகுகுணா (ஆங்கிலம்: Sunderlal Bahuguna 9,சனவரி 1927) இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார்.[1] இவர் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் 1927 ஆம் வருடம் ஜனவரி மாதம் 9 ஆம் தியதி பிறந்தார். இவர் ஓர் காந்தியவாதி ஆவார். இமயமலைப் பகுதி காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தை (Chipko movement) 1970 களில் ஆரம்பித்தவர் இவர்.
பெற்ற விருதுகள்
- பத்ம சிறீ விருது (1981)
- ரைட் லைவ்லிகூட் விருது (1987)
- ஜம்லால் பஜாஜ் விருது (1986)
- ரூர்கீ ஐ.ஐ.டி. வழங்கிய சமூக அறிவியலுக்கான மதிப்புறு முனைவர் பட்டம் (1989)
- பத்ம விபூசண் விருது (2009)[2]
மேற்கோள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.