ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏனநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம். தற்போது ஏனநல்லூர் என்றழைக்கப்படும் எயினனூர், ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.[1]

தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற
ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):எயினனூர்
பெயர்:ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஏனநல்லூர், (மருதாந்தநல்லூர் அருகில்)
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரம்மபுரீசுவரர்
தாயார்:கற்பகாம்பாள்
பாடல்
பாடல் வகை:தேவார வைப்புத்தலம்

அமைவிடம்

கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மருதாந்த நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது இத் தலம். கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது. [1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 178

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.