விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3] [4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6]வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.[7]

விஜயநகரப் பேரரசு
1336–1646
ವಿಜಯನಗರ ಸಾಮ್ರಾಜ್ಯ / విజయనగర సామ్రాజ్యము அமைவிடம்
1446 - 1520களில் விஜயநகரப் பேரரசு
தலைநகரம் விஜயநகரம் என்ற ஹம்பி, பெனுகொண்டா,சந்திரகிரி கோட்டை [1]
மொழி(கள்) கன்னடம், தெலுங்கு[2] மற்றும் சமசுகிருதம்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
முடியாட்சி
 -  1336–1356 முதலாம் ஹரிஹரர்
 - 1642–1646 மூன்றாம் ஸ்ரீரங்கா
வரலாறு
 - உருவாக்கம் 1336
 - Earliest records 1343
 - குலைவு 1646
நாணயம் வராகன்
முந்தையது
பின்னையது
போசளப் பேரரசு
காக்கத்தியர்
மதுரை சுல்தானகம்
பாண்டியர்
முசுனூரி நாயக்கர்கள்
ரெட்டிப் பேரரசு
மைசூர் அரசு
கேளடி நாயக்கர்கள்
தஞ்சை நாயக்கர்கள்
மதுரை நாயக்கர்கள்
சித்திரதுர்க நாயக்கர்கள்
பிஜப்பூர் சுல்தானகம்
கோல்கொண்டா சுல்தானகம்
காளஹஸ்தி நாயக்கர்கள்
தற்போதைய பகுதிகள்  இந்தியா
விஜயநகரப் பேரரசு
சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646

மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.

இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கலை, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.

இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.

மாற்றுப் பெயர்

விஜயநகரப் பேரரசை கர்நாடகா இராச்சியம் அல்லது கர்நாடகப் பேரரசு என்று சில சரித்திரக் குறிப்புகளிலும்[8][9] மற்றும் கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய ஜாம்பவதி கல்யாணம் எனும் நூல் மற்றும் தெலுங்கு மொழியில் இயற்றிய வசு சரித்திரம் எனும் நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.[10]

வரலாறு

1400ல் தென்னிந்தியாவின் வரைபடம்

சங்கம மரபு

சங்கம மரபைச்[11][12][13] சேர்ந்த முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் இணைந்து, வித்யாரண்ய தீர்த்தர்[14] வழிகாட்டுதலின் படி, விஜயநகரம் என்ற ஹம்பியை தலைமையிடமாகக் கொண்டு, 1336ல் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. ந[11][12][13] 1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விஜயநகர சாம்ராஜ்யம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது.[5][14][15]

விஜயநகர மன்னர்கள் தெலுங்கு மக்கள் ஆவார். போசாளப் பேரரசின் வீழ்ச்சியின் போது, இவர்கள் முதலில் காக்கத்தியர்களுடன் இணைந்து, அதன் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர்.[16]

1294ல் தென்னிந்தியாவில் தில்லி சுல்தான் படைகள் தோற்ற போது, போசளப் பேரரசின் படைத்தலைவர் மூன்றாம் சிக்கய நாயக்கர் (1280–1300), தன்னை சிற்றரசனாக அறிவித்துக் கொண்டு தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றினார்.[17]

தற்கால குல்பர்காவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் அருகில் சிக்கய நாயக்கர் நிறுவிய காம்பிலி இராச்சியம் , தில்லி சுல்தான்களின் தொடர் படையெடுப்பால் குறுகிய காலத்தில் முடிவுற்றது.[17][18] காம்பிலி இராச்சியம் அழிந்த 8 ஆண்டுகள் கழித்து 1336ல் ஹம்பியில் விஜயநகர இராச்சியம் நிறுவப்பட்டது.[19]

விஜயநகர இராச்சியம் துவக்கப்பட்ட இருபதாண்டுகளுக்குள் முதலாம் ஹரிஹரர் துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள பெரும்பாலன பகுதிகளை கைப்பற்றி தன்னை கிழக்கு - மேற்கு கடல்களின் தலைவர் ("master of the eastern and western seas") என அறிவித்துக் கொண்டார்.

1374ல் முதலாம் ஹரிஹரருக்குப் பின் பட்டமேறிய முதலாம் புக்கராயர் ஆற்காடு மற்றும் கொண்ட வீடு ரெட்டி இராச்சியத்திரையும், மதுரை சுல்தானகத்தையும் வென்று, மேற்கில் கோவா, கிழக்கில் துங்கபத்திரை ஆறு, வடக்கில் கிருஷ்ணா ஆற்றுச் சமவெளி வரை ஆட்சி செலுத்தினார். [20][21]

முதலாம் புக்கராயரின் மகன் இரண்டாம் ஹரிஹர ராயன் விஜயநகரப் பேரரசை கிருஷ்ணா ஆற்றிக்கு மேல் வரை விரிவு படுத்தி, தென்னிந்தியா முழுவதையும் விஜயநகரப் பேரரசின் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். பின் ஆட்சி கட்டிலில் அமர்ந்த முதலாம் தேவ ராயன் தற்கால ஒடிசாவின் கஜபதி பேரரசை கைப்பற்றினார்.

1407ல் விஜயநகரப் பேரரசர் முதலாம் தேவராயர், பாமினி சுல்தானுடன் செய்து கொண்ட போர் அமைதி உடன்படிக்கைப் படி, 1435 முடிய, ஆண்டிற்கு ஒரு இலட்சம் அணாக்களும், 5 மணங்கு முத்துக்களும், 50 யானைகளும் கப்பம் கட்டினார். 1424ல் பட்டமேறிய இரண்டாம் தேவ ராயன் தற்கால கேரளாவின் கோழிக்கோடு, கொல்லம் பகுதிகளைக் கைப்பற்றி இலங்கை மற்றும் பர்மாவை கடல்வழியாகச் சென்று படையெடுத்தார். தொடர்ந்து நடந்து வந்த பாமினி சுல்தானகம் - விஜயநகரப் போர்களால், விஜயநகரப் பேரரசு தனது இராணுவத்தை விரிவாக்கியது. அதே நேரத்தில் விஜயநகரப் பேரரசின் படைத்தலைவர்களுக்கிடையே பிணக்குகளும் தோன்றின.

சாளுவ மரபு

1485ல் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விஜயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485 – 1491) இராணுவப் புரட்சி மூலம் விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் நரசிம்ம ராயன் II ஆகியோர் 1491 முதல் 1505 முடிய பேரரசை ஆண்டனர்.

துளுவ மரபு

1505 பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விஜயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். 1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருஷ்ணதேவராயரின் (ஆட்சிக் காலம்:1509 - 1529) ஆட்சி துவங்கியது.[22] இவர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார். [23] பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.[24][25]

கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. [26][27] தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார்.[28][29] 1520ல் நடைபெற்றராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார்.[30]

விஜயநகரத்தின் இயற்கையாக அமைந்த கோட்டை

1529ல் கிருஷ்ணதேவராயரின் ஒன்று விட்ட தம்பி அச்சுத தேவ ராயன் (ஆட்சிக் காலம்: 1529-1542) விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். 1542ல் அச்சுத தேவராயர் இறக்கவே அவரது இளவயது மருமகனான சதாசிவ ராயன், கிருஷ்ணதேவராயரின் மருமகனும், அரவிடு மரபினனுமான அலிய ராமராயனை காப்பாளராகக் கொண்டு ஆட்சி செய்தார். 1543ல் அச்சுத தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து, சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் (ஆட்சிக் காலம்:1542-1570) முடிசூட்டப்பட்டான். இவனும் அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே ஆட்சி செய்ய முடிந்தது. சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.

விஜய நகர பேரரசின் முத்திரை பன்றி, சூரியன் மற்றும் குத்துவாள்

சனவரி, 1565ல் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டா சண்டையில், அலிய ராம ராயனின் விஜயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர்.[31] இப்போரில் விஜயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முஸ்லிம் படைத்தலைவர்கள் தங்கள் படையணிகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விஜயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான ஹெர்மன குல்கே மற்றும் டயட்மர் ரோதர்மண்ட் கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் அலிய ராம ராயனின் தலையை கொய்தனர்.[32][33] மேலும் சுல்தான்கள் ஹம்பி எனும் விஜயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர். [34]

அரவிடு மரபு

தலிகோட்டா சண்டையில் இறந்த அலிய ராம ராயனின் தம்பியும், அரவிடு மரபைத் துவக்கியவனுமான திருமலை தேவ ராயன், தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவிற்கு விஜயநகரப் பேரரசின் தலைநகரை மாற்றினார். தலைக்கோட்டைப் போரின் முடிவில் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். [35] 1572ல் திருமலை தேவ ராயனை அரியணை விட்டு விலகிய போது, மீதமிருந்த விஜயநகரப் பேரரசை தனது மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 1614ல் அரவிடு மரபினரின் விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிற சுல்தான்களின் தொடர் படையெடுப்புகளால் உருக்குலைந்து, இறுதியாக 1646ல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது.[36][37][38]

விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் போது தென்னிந்தியாவில் மைசூர் அரசு, கேளடி நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செலுத்த துவங்கினர். [39]

ஆட்சி நிர்வாகம்

பேரரசருக்கு ஆட்சியில் ஆலோசனைகள் வழங்க காரிய கர்த்தா அல்லது இராயசம் எனப்படும் பிரதம அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை இருந்தது.[40] அரச அரண்மனைக்கு அருகில் அரசு ஆவணங்கள் அரச முத்திரையுடன் பராமரிக்கும் செயலகம் செயல்பட்டது.[41] அரண்மனை நிர்வாகத்தை மேற்கொள்ள 72 துறைகள் இருந்தன.[42][43][44]

விருபட்சர் கோயிலில் கிருஷ்ணதேவராயரின் கன்னட மொழி கல்வெட்டில், தனது மணிமகுடம் சூட்டும் நிகழ்வு மற்றும் மகாமண்டபம் கட்டியது குறித்தது, கிபி 1509

பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களைக் கொண்டிருந்த பிரிவாகும். இந்நிர்வாக அலகுகளை பரம்பரையாக ஆண்டதுடன், பேரரசிற்கு ஆண்டு தோறும் திறை செலுத்தினர். மண்டலத்தின் ஆளுநர் மண்டலேஸ்வரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார். விஜய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.

நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தவைர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம் பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், படைத்துறைக்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும். நீதித்துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன. கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[45]

விஜய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது. அரபு நாடுகளின் வணிககளிடமிருந்து உயர்ரக குதிரைகள் இராணுவத்திற்காக வாங்கப்பட்டன. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கபட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது. படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது

மதுரை பிரதேசமும், கேளடி பிரதேசமும் பேரரசின் படைத்தலைவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.

1.1 மில்லியன் பேரரசின் படைகளில் இசுலாமிய வீரரகளும் சேர்க்கப்பட்டனர். கிருஷ்ணதேவராயரின் தனிப்படையில் மட்டும் ஒரு இலட்சம் காலாட்படையினரும், 20,000 குதிரைப்படைவீரர்களும், 900 யானைப்படையினரும் இருந்தது.

பொருளாதாரம்

பேரரசின் பொருளாதாரம் சோளம், நெல், கரும்பு, பருத்தி, பட்டு, நவதானியங்கள், பருப்பு வகைகள், வெற்றிலை, மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களும் மற்றும் தென்னை போன்ற விளைபயிர்களைச் சார்ந்து இருந்தது. நீர்ப்பாசன வசதிகளை செய்த கொடுத்த விஜயநகர ஆட்சியாளர்கள், வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க புதிய ஏரிகள் வெட்டினர். துங்கபத்திரா போன்ற ஆறுகளின் குறுக்கே தடுப்பு அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டது.

பேரரசின் தலைநகரமான விஜயநகரம் எனும் ஹம்பி, பல நாட்டவர் கூடும் பெரும் வணிக மையமாக விளங்கியது. இந்நகர வணிக வளாகங்களில் தங்கம், வெள்ளி முத்து, மாணிக்கம், வைடூரியம், இரத்தினம், பவளம் போன்ற நவரத்தினங்கள் விற்கப்பட்டது.[46] நாட்டின் செலாவனிக்கு முக்கியமாக தங்க நாணயம் வராகன் பயன்பட்டது.

பேரரசில் உள்ள கோயில்கள் சீரமைப்பு வேளைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், திறன் மிகு கட்டிடக் கலைஞர்களுக்கும், சிற்பிகளுக்கும் மற்றும் உலோகத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.

அரபுக் கடலை ஒட்டிய மலபாரில் உள்ள கண்ணணூர் துறைமுகம் வழியாக அரேபியா, பாரசீகம், தென் ஆப்ரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது. பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ஆகும். அரேபியக் குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவழம், குங்குமப்பூ, பாதரசம், சீனத்துப்பட்டு துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சியடைந்தது.

தர்மேஷ்வரர் கோயில், ஹோஸ்கோட்டை (பெங்களூர் அருகே) செப்புத் தகடுகள், விஜயநகரப் பேரரசு
தர்மேஷ்வரர் கோயில், ஹோஸ்கோட்டை, (பெங்களூர் அருகே), விஜயநகரப் பேரரசு காலத்திய செப்புத் தகடுகள்[47]

பண்பாடு

சமூக வாழ்க்கை

ராமர் கோயிலின் வெளிச் சுவரில் விஜயநகரப் பேரரசு காலத்திய போர்வீரர்கள், போர்க்குதிரைகள் மற்றும் யானைகளின் சிற்ப வரிசைகள்

விஜயநகரப் பேரரசில் இந்து சாதிய முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டது. அரச கட்டளைகளை நிறைவேற்ற, கிராமப்புறங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவினரும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சமயச் சடங்குகளிலும், இலக்கியங்களிலும், அமைச்சரவைகளிலும் அந்தண சமூகம் உயரிடம் வகித்தது.[48] இருப்பினும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தோன்றிய சர்வக்ஞர், வேமனாமொல்லா, மொல்லா போன்ற சமய இலக்கியாவாதிகளும், கவிஞர்களும் சமூகத்தில் உயரிடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர். படைத்துறைகளில் இசுலாமியர் உள்ளிட்ட திறமை உள்ள அனைத்து சமூக இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

விஜயநகர பேரரசு காலத்திய கோயில் கல்வெட்டுகள், ஹோச்கொடே, கர்நாடகா[47]

விஜயநகரப் பேரரசில் உடன்கட்டை ஏறல் வழக்கம் இருந்தமைக்கு சான்றாக 50 நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[49]

12ம் நூற்றாண்டில் பசவர் தோற்றுவித்த வீர சைவம் எனும் லிங்காயத மரபு தற்கால வட கர்நாடகப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பின்பற்றினர்.

சமூக - சமய நெறிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்காற்றினர். திருமாலம்பா தேவி எனும் கன்னட மொழிக் கவிஞர் வரதம்பிகா பரிணயம் எனும் நூலையும், குமார கம்பணன் மனைவிகங்கதேவி எனும் அரசி மதுரா விஜயம் எனும் சமசுகிருத வரலாற்று நூலையும் எழுதியுள்ளனர்.[50][51][52] அனைத்து ஊர்களிலும் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது.[53] உடலை வளுப்படுத்தும் மல்யுத்தப் பயிற்சி கூடங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்து தொன்மவியலை விளக்கும் விருபாட்சர் கோயில் கூரை ஓவியங்கள், 14ம் நூற்றாண்டு

நாணயம்

ஹம்பி, பெனுகொண்டா மற்றும் திருப்பதிலிருந்து தேவநாகரி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியிட்ட பேரரசின் நாணயகளில் விஜயநகரப் பேரரசர்களின் பெயர்கள் கொண்டிருந்தது.[54][55] தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களை வராகம், பொன், பக்கோடா, பணம் மற்றும் காசு என அழைக்கப்பட்டது.[56] நாணயங்களில் பாலகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாஜலபதி, பூமாதேவி, சிறீதேவி, காளைகள், யானைகள், பறவைகள், அனுமன் மற்றும் கருடன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.[57][58]

சமயம்

இந்து சமயத்தினரான விஜயநகரப் பேரரசு அனைத்து சமயங்களையும், சமயப் பிரிவுகளையும், அயல் நாட்டவர்களையும் வேறுபாடு காட்டாது சமமாக நடத்தியது.[59] ஆனால் அரசவை நடைமுறை மற்றும் ஆடைகளில் சுல்தான்களைக் பின்பற்றினர்.[60]

ஹரிஹரர்-புக்கர் சகோதரர்களுக்கு பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யரையும், அவர் அலங்கரித்த ஹரிஹர- சிருங்கேரி மடத்தை ஆதரித்து வளர்த்ததுடன், சைவத்தைப் பின்பற்றினர். பின் வந்த சாளுவ மரபு மற்றும் துளுவ மரபு பேரரசர்கள் வைணவத்தைப் பின்பற்றினர். பேரரசின் முத்திரையாக விஷ்ணுவின் அவதாரமான வராகத்தைக் கொண்டனர்.

தற்கால கர்நாடகப் பகுதிகளில் புரந்தரதாசர், கனகதாசர், ஹரிதாசர் போன்றவர்களால் பக்தி இயக்கம் வளர்ந்தது. பசவர் நிறுவிய லிங்காயதம் செழித்தோங்கியது. சமஸ்கிருத மொழியில் புதிய இலக்கியங்கள் தோன்றியது.

கர்நாடக இசைக் அறிஞர் அன்னமாச்சாரியார் தெலுங்கு மொழியில் பல பக்தி கீர்த்தனைகள் இயற்றினார்.[61]

மொழி

விஜயநகரப் பேரரசின் அவையில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆட்சி மொழியாக இருந்தது. பேரரசின் பகுதிகளில் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் பயிலப்பட்டது. கன்னட மொழியில் 7000 கல்வெட்டுகளும், 300 தாமிரப் பட்டயங்களும், மீதமுள்ள கல்வெட்டுகள் தெலுங்கு, தமிழ் மற்றும் சமசுகிருத மொழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[62][63][64]

இலக்கியம்

விஜயநகரப் பேரரசில் தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் செழித்து வளர்ந்தது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் வாழ்கை வரலாறு, புனைவு, இசை, இலக்கணம், கவிதை, மருத்துவம் மற்றும் கணிதம் தொடர்பான நூல்கள் இயற்றப்பட்டது. அரசவை மொழியாக கன்னடமும், தெலுங்கும் இருந்தது. [65][66][67] கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் அனத்து துறைகளிலும் தெலுங்கு மொழி உச்சத்தை தொட்டது.[66]

சமசுகிருத மொழியில் சாயனர் நான்கு வேதங்களுக்கும் உரைகள் எழுதினார்.[68][69] வித்யாரண்யர், அத்வைத சிந்தாந்தத்திற்கு விளக்க உரையாக பஞ்ச தசீ மற்றும் சர்வதர்சனசங்கிரகம் எனும் நூற்களை எழுதியள்ளார்.

பேரரசின் அரச குடும்பத்தவர்களில் கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் குறித்து ஆமுக்தமால்யதா மற்றும் ஜாம்பவதி கல்யாணம்[10] என் இராண்டு தெலுங்கு நூற்களை இயற்றினார். மதுரை சுல்தானகத்தை வென்ற குமார கம்பணனைப் போற்றும் விதமாக, கங்கதேவி எனும் இளவரசி மதுரா விஜயம் எனும் வீரகம்பராய சரித்திரம் நூலையும் இயற்றியுள்ளனர்.[70]

கிருஷ்ணதேவராயரின் அரசவைக் கவிஞர்களான தெனாலி ராமன், அல்லாசானி பெத்தன்னா, நந்தி திம்மன்னா, அய்யல்லு இராமபத்ருடு, மடையாகரி மல்லன்னா, இராமராஜாபூசணம் ஆகியோர் தெலுங்கு மொழியில் கவிதைகள் இயற்றினர். தமிழ் மொழியில் சொரூபானந்தர் மற்றும் தத்துவராயர் அத்வைத வேதாந்ததிற்கு விளக்க உரை நூல்கள் எழுதினார். மலையாள மொழியில் நீலகண்ட சோமயாஜி வானவியல் குறித்தான நூல் எழுதியுள்ளார்.[71]

கட்டிடக்கலை

யாளித் தூண்கள், அகோரேஸ்வரர் கோயில், இக்கேரி, சிமோகா மாவட்டம், கர்நாடகா

போசளர் மற்றும் திராவிடக் கட்டிடக்கலை கலந்து வடிக்கப்பட்ட விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. இவை, மரம், செங்கல், சுண்ணாம்புச் சாந்து ஆகியவற்றைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில் தெய்வகள், முனிவர்கள், தேவதைகள் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள இராய கோபுரங்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.

மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் திருக்குளம் என்பனவும் கோயில்களின் கூறுகள் ஆயின. தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

கிருஷ்ணர் கோயிலின் குளம்
கல் இரதத்துடன் கூடிய விட்டலர் கோயில், ஹம்பி
விஜயநகர மன்னர்களால் சீரமைத்து கட்டபட்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களின் வான்பரப்புக் காட்சி

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Howes, Jennifer (January 1, 1998). The Courts of Pre-colonial South India: Material Culture and Kingship. Psychology Press. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:07-0071-585-1.
  2. Bridges, Elizabeth J. (2016). "Vijayanagara Empire". The Encyclopedia of Empire. பக். 1–5. doi:10.1002/9781118455074.wbeoe424.
  3. The Vijayanagar empire, 1336–1646
  4. Stein 1989, பக். 1.
  5. Nilakanta Sastri 1955, p. 216
  6. VA Smith. The Oxford History of India. Clarendon: Oxford University Press. பக். 275–298. https://archive.org/stream/oxfordhistoryofi00smituoft#page/274/mode/2up.
  7. "Master Plan for Hampi Local Planning Area". மூல முகவரியிலிருந்து 30 April 2013 அன்று பரணிடப்பட்டது.
  8. K.V.Ramesh. "Telugu Inscriptions from Vijayanagar Dynasty, vol16, Introduction". Archaeological Survey of India. What Is India Publishers (P) Ltd., Saturday, December 30, 2006. பார்த்த நாள் 2006-12-31.
  9. Nilakanta Sastri 1955, p. 268
  10. New Light on Hampi, Recent research in Vijayanagara, edited by John M. Fritz and George Michell, MARG, 2001, p14
  11. By James Mansel Longworth page 204
  12. edited by J C morris page 261
  13. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 103–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80607-34-4.
  14. http://www.sringeri.net/jagadgurus/sri-vidyaranya/the-vijayanagara-empire
  15. Kamath 2001, p. 160
  16. Robert Sewell (A Forgotten Empire Vijayanagar: A Contribution to the History of India, 1901), Nilakanta Sastri 1955, N. Ventakaramanayya (The Early Muslim expansion in South India, 1942) and B. Surya Narayana Rao (History of Vijayanagar, 1993) in Kamath (2001) pp157–160.
  17. Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பக். 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-26693-2. https://books.google.com/books?id=OpxeaYQbGDMC&pg=PA18.
  18. David Gilmartin; Bruce B. Lawrence (2000). Beyond Turk and Hindu: Rethinking Religious Identities in Islamicate South Asia. University Press of Florida. பக். 300–306, 321–322. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8130-3099-9. https://books.google.com/books?id=9ZhT5Ilq5kAC&pg=PA321.
  19. Kamath (2001), p162
  20. Nilakanta Sastri 1955, p. 317
  21. Nilakanta Sastri 1955, p. 250
  22. Eaton 2006, பக். 87-88.
  23. Nilakanta Sastri 1955, p. 239
  24. Kamath (2001), p159
  25. From the notes of Portuguese traveler Domingo Paes about Krishna Deva Raya: A king who was perfect in all things (Hampi, A Travel Guide 2003, p31)
  26. Eaton 2006, பக். 88-89.
  27. போர்த்துகீசியரான பார்போசாவின் கூற்றுப் படி, கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் ஹம்பி எனும் விஜயநகரம் பல கோயில்கள் மற்றும் கோட்டைகளுடன் மிகப்பொழிவுடன் விளங்கியது.(Kamath 2001, p186)
  28. (Mahanavami Dibba) (Dallapiccola 2001, p66)
  29. Krishna Reddy (2008). Indian History. Tata McGraw-Hill. https://books.google.co.in/books?id=CeEmpfmbxKEC&pg=SL2-PA167&dq=raichur+battle&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=raichur%20battle&f=false.
  30. Eaton 2006, பக். 96-98.
  31. Hermann Kulke; Dietmar Rothermund (2004). A History of India. Routledge. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-32920-0. https://books.google.com/books?id=RoW9GuFJ9GIC., Quote: "When battle was joined in January 1565, it seemed to be turning in favor of Vijayanagara - suddenly, however, two Muslim generals of Vijayanagara changes sides. Rama Raya was taken prisoner and immediately beheaded."
  32. Eaton 2006, பக். 98, Quote: "Husain (...) ordered him beheaded on the spot, and his head stuffed with straw (for display).".
  33. Eaton 2006, பக். 98-101.
  34. Eaton 2006, பக். 100-101.
  35. Kamath (2001), p174
  36. Vijaya Ramaswamy (2007). Historical Dictionary of the Tamils. Scarecrow Press. பக். Li–Lii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-6445-0. https://books.google.com/books?id=H4q0DHGMcjEC.
  37. Eaton 2006, பக். 101-115.
  38. Kamath (2001), p220, p226, p234
  39. From the notes of Persian Abdur Razzak and research by B.A. Saletore (Kamath 2001, p175)
  40. From the notes of Nuniz (Kamath 2001, p175)
  41. Nilakanta Sastri 1955, p. 286
  42. Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.42
  43. Vijayanagara Administration
  44. குமுதம் ஜோதிடம்; 3. சனவரி 2014; பக்கம் 2
  45. From the notes of Duarte Barbosa (Kamath 2001, p181).
  46. Rice, Benjamin Lewis (1894). Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District. Mysore State, British India: Mysore Department of Archaeology. https://archive.org/details/epigraphiacarnat09myso. பார்த்த நாள்: 11 August 2015.
  47. (Nilakanta Sastri 1955, p. 289)
  48. Verghese (2001), p 41
  49. William Joseph Jackson (2005). Vijayanagara Voices: Exploring South Indian History and Hindu Literature. Ashgate Publishing, Ltd.. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-3950-3.
  50. மதுரா விஜயம்
  51. மதுரா விஜயம்
  52. Kamath, p180
  53. "Vijayanagara Coins". Government Museum Chennai. பார்த்த நாள் 2006-12-31.
  54. Prabhu, Govindaraya S.. "Catalogue, Part one". Vijayanagara, the forgotten empire. Prabhu's Web Page On Indian Coinage. பார்த்த நாள் 2006-12-31.
  55. Harihariah Oruganti. "Coinage". Catalogue. Vijayanagara Coins. மூல முகவரியிலிருந்து 30 December 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-12-31.
  56. Ramesh, K. V.. "Stones 1–25". South Indian Inscription, Volume 16: Telugu Inscriptions from Vijayanagar Dynasty. New Delhi: Archaeological Survey of India. http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_16/stones_1_to_25.html. பார்த்த நாள்: 2006-12-31.
  57. Sastry & Rao, Shama & Lakshminarayan. "Miscellaneous Inscriptions, Part II". South Indian Inscription, Volume 9: Kannada Inscriptions from Madras Presidency. New Delhi: Archaeological Survey of India. http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_9/vijayanagara.html. பார்த்த நாள்: 2006-12-31.
  58. From the notes of Duarte Barbosa (Kamath 2001, p. 178)
  59. Wagoner, Phillip B. (November 1996). "Sultan among Hindu Kings: Dress, Titles, and the Islamicization of Hindu Culture at Vijayanagara". The Journal of Asian Studies 55 (4): 851-880. doi:10.2307/2646526.
  60. Kamath (2001), p185
  61. G.S. Gai in Kamath (2001), p10, 157.
  62. Arthikaje, Mangalore. "The Vijayanagar Empire". 1998–2000 OurKarnataka.Com, Inc. பார்த்த நாள் 2006-12-31.
  63. Subbarayalu, Y; Rajavelu, S, தொகுப்பாசிரியர்கள் (2015). Inscriptions of the Vijayanagara Rulers: Volume V, Part 1 (Tamil Inscriptions). New Delhi: Indian Council of Historical Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:938060775X.
  64. Pollock, Sheldon. https://books.google.com/books?id=ak9csfpY2WoC&pg=PA94. பார்த்த நாள்: 2013-07-23. "Quote:"Telugu had certainly been more privileged than Kannada as a language of courtly culture during the reign of the last Vijayanagara kings, especially Krsnadevaraya (d.1529)", Nagaraj in Pollock (2003), p378
  65. Quote:"Royal patronage was also directed to the support of literature in several languages: Sanskrit (the pan-Indian literary language), Kannada (the language of the Vijayanagara home base in Karnataka), and Telugu (the language of Andhra). Works in all three languages were produced by poets assembled at the courts of the Vijayanagara kings". Quote:"The Telugu language became particularly prominent in the ruling circles by the early 16th century, because of the large number of warrior lords who were either from Andhra or had served the kingdom there", Asher and Talbot (2006), pp 74–75
  66. "Telugu Literature". பார்த்த நாள் 2013-07-19. ""Telugu literature flowered in the early 16th century under the Vijayanagara empire, of which Telugu was the court language. ""
  67. Max Müller, Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.), 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.
  68. Vijayanagara Literature from book History of Andhras, p. 268f.
  69. Devi, Ganga (1924). Sastri, G Harihara; Sastri, V Srinivasa. eds. Madhura Vijaya (or Veerakamparaya Charita): An Historical Kavya. Trivandrum, British India: Sridhara Power Press. https://archive.org/details/madhura_vijaya. பார்த்த நாள்: 21 June 2016.
  70. "History of Science and Philosophy of Science: A Historical Perspective of the Evolution of Ideas in Science", editor: Pradip Kumar Sengupta, author: Subhash Kak, 2010, p91, vol XIII, part 6, Publisher: Pearson Longman, ISBN 978-81-317-1930-5

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.