புஜங்கத்ராசிதம்
புஜங்கத்ராசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்திநான்காவது கரணமாகும். காலை வளைத்து உயரத்தூக்கி,முக்கோண வளைவாகத் தொடையை வளைத்து,இடுப்பு முழந்தாளையும் வளைத்து நின்று ஆடுவது. அதாவது பாம்பை கண்டு அஞ்சி ஓடுவது போன்ற நிலை. வலது கையைத் தோலஹஸ்தமாகவும் இடது கையைக் கடகாமுகமாகவும் வைத்து கொள்வது புஜங்கத்ராஸிதமாகும் இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.