முனி தாண்டவம்

முனி தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. முனிதாண்டவம் என்பது பார்வையை பல கோணங்களில் செலுத்தி அந்தக் கோணங்களில் கைகளையும், கால்களையும் வளைத்து ஆடுவது. இந்த நடனத்தை அங்க அசைவுகளையட்டி ஆடுவதால் வித்தாரம் எனவும் அழைக்கின்றனர். [1]

சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது. இந்த தாண்டவம் நவராத்திரியின் ஆறாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [2]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.vikatan.com/sakthivikatan/2012-jun-26/special-story/20316.art
  2. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.