கரணங்கள்
கரணங்கள் என்பது பரதநாட்டிய கலையின் ஒரு அலகு ஆகும். கரணம் என்ற சொல்லானது கிறு எனும் வடமொழி வழியே வந்ததாகும். இதற்கு முழுமையான செயல் என்று பொருள். இதனை சொக்கம் என்றும் சுத்த நிருத்தம் என்றும் அழைக்கின்றனர். [1]
தோற்றம்
தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் கரணங்களைக் கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகைகள்
தாலபுஷ்பபுடம் முதலாக கங்காவதரணம் வரை கரணங்களின் வகைகள் நூற்றியெட்டு என்று அறியப்பட்டுள்ளன. இவை நூற்றியெட்டு தாண்டவங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
கருவிநூல்
பரதக்கலை (நூல்) - வி.சிவகாமி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.