மலரிடுகை

தாளபுஷ்பபுடம்

தாளபுஷ்பபுடம் ஆடும்
சிவபெருமான்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:முதல் தாண்டவம்

மலரிடுகை என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இத்தாண்டவம் தாளபுஷ்பபுடம் என்றும் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே முதல் கரணமாகும்.

இடது பக்கத்து மார்பிற்கு நேராக, புஷ்பபுட முத்திரை பிடித்து கால் நுனிகளால் சஞ்சரிப்பவராக சிறிது வணங்கிய பக்கத்தையுடையவராக நடிப்பது புஷ்பபுடத்தோடு இடதுப் பக்கமாக இருப்பதால் இது தலபுஷ்பபுடம் என்னும் பெயர்பெற்றது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.