ஈ. சரவணபவன்
ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]
ஈ. சரவணபவன் E. Saravanapavan நாஉ | |
---|---|
![]() | |
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 15, 1953 |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இருப்பிடம் | 70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை |
பணி | வெளியீட்டாளர், தொழிலதிபர் |
சமயம் | இந்து |
இனம் | இலங்கைத் தமிழர் |
அரசியலில்
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது (நவம்பர் 15, 2013)
சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]
மேற்கோள்கள்
- "E. SARAVANAPAVAN". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.
- "ITAK submits candidates’ list to contest Jaffna district". தமிழ்நெட். 24 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31258. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010.
- "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.