நிமல் சிரிபால டி சில்வா
நிமல் சிரிபால டி சில்வா (Nimal Siripala de Silva, பிறப்பு: செப்டம்பர் 6, 1944), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
நிமல் சிரிபால டி சில்வா நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வரும். | |
---|---|
பதுளை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2015 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 6, 1944 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு
93/20, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர், பௌத்தம் மதத்தைச் சேர்ந்தவர், ஊடகவியலாளர்.
மேற்கோள்கள்
- "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
- http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
- http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in