வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஆறாவது படலமாகும்.

படலச் சுருக்கம்

இதில் சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் மதுரைப்பதியிலே திருமணம் முடிந்த பின்னர்,திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் உணவு உண்ண சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் அழைத்தார். திருமணத்திற்கு வந்திருந்தோரில் பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத முனிவரும் சிவபெருமானிடம் பொன்னம்பலத்தில் ஆடியருளும் திருநடனத்தை மதுரைப்பதியிலே ஆடக்கோரியதும், சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் ஆடிய திருநடனத்தை [1] கூறும் படலமாகும்.

சான்றாவணம்

  1. திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.