மாணிக்கம் விற்ற படலம்

மாணிக்கம் விற்ற படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினேழாவது படலமாகும்.[1]

திருவிளையாடல்

வீரபாண்டியனின் மரணத்திற்கு பிறகு அவரின் மகனான செல்வ பாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தனர். அதற்கு கிரீடம் செய்ய விலைமதிப்பு மிக்க நவரத்தின கற்களை சிவபெருமானே வைர வியாபாரியாக வந்து அளித்தார். அத்துடன் செல்வ பாண்டியனுக்கு அபிசேகப் பாண்டியன் என்ற பட்டப் பெயரையும் சூட்டும் படி கூறினார். செல்வ பாண்டியனின் முடிசூட்டு விழா நடந்த பின்பு வியாபாரியாக வந்தது சிவபெருமான் என்பதை அறிந்தனர்.

காண்க

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/slet/l41d0/l41d0lft.jsp திருவிளையாடற் புராணம் - தமிழாய்வு தளம் பார்த்த நாள் செப்டம்பர் 16 2013
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.