சமணரைக் கழுவேற்றிய படலம்
சமணர்கள் கழுவேறிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63ஆவது படலமாகும். இப்படலம் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்
இப்படலத்தில் பாண்டிய மன்னனின் சுரத்தினை திருஞானசம்பந்தர் தீர்த்தபின்பு நிகழந்தவைகளை குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னின் நோயைக் குணப்படுத்த முடியாத சமணர்கள் திருஞானசம்பந்தரை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைப்பதும், அதில் தோற்றுப்போனால் தங்களை கழுவேற்றலாம் என வாக்குறிதி அளிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்விரு விவாதங்களில் வெல்லும் திருஞானசம்பந்தரைக் காண சிவபெருமானே முதியவராக வருவதும் இப்படத்தில் விளக்கப்பட்டுள்ளன.
காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.