முனீஸ்வரநாதர்

முனீஸ்வரநாதர் (Munisuvrata), சமண சமயத்தின் 20வது தீர்த்தங்கரர் ஆவார். [1] முனீஸ்வரநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தவர். முனீஸ்வரநாதரின் காலத்தில் சைன ராமாயணம் படைக்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[2] இவரது குரு மல்லிநாதர் ஆவார்.

முனீஸ்வரநாதர்
முனீஸ்வரநாதர்
அதிபதி20வது சமணத் தீர்த்தங்கரர்

மன்னர் சுமித்திரருக்கும் - இராணி பத்மாவதிக்கும் பிறந்த முனீஸ்வரநாதர்[3] இவர் 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]

முனீஸ்வரநாதர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனிலும், சமண சமய சாத்திரங்களின் படி, இவரது நிறம் கருமை, வாகனம் ஆமை, பரிவார யட்சினி பகுரூபினி ஆவார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.[5]

கோயில்கள்

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.