நிம்பா
நிம்பா என்பவர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் லவோதிக்கேயா திருச்சபையினை சேர்ந்தவர். இவர் வீட்டில் ஆதி திருச்சபை கூடி இறைவேண்டலில் ஈடுபட்டதாக புனித பவுல் குறிக்கின்றார்.[1] இவரின் பெயருக்கு நீரணங்கு என்பது பொருள். இப்பெயர் நிம்பாதோரஸ் என்னும் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். தமிழ் பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் இவர் பெண்பாலில் குறிக்கப்பட்டாலும் இவரின் பெயரின் ஒலியழுத்தத்தை வைத்து இவரை ஆணாக கூட குறிக்கலாம்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.