தெதரு ஆறு

தெதரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 5வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 8வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4313 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 27 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2616 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

தெதரு ஆறு
மூலம் மாத்தளை
வாய் சிலாபம்
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 142 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 1180 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 2616 சது.கி.மீ.

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.