சாயர்புரம்
சாயர்புரம் (Sawyerpuram), தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவைகுண்டத்திற்கு தென்மேற்கே 19 கிம் கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.
சாயர்புரம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°29′N 78°06′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி மாவட்டம் |
அருகாமை நகரம் | தூத்துக்குடி |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,792 (2011) • 601/km2 (1,557/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 21.3 சதுர கிலோமீட்டர்கள் (8.2 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/sawyerpuram |
அமைவிடம்
சாயர்புரத்திற்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே தூத்துக்குடி 19 கிமீ, மேற்கே திருநெல்வேலி 40 கிமீ, தெற்கே ஏரல் 10 கிமீ, தென்மேற்கே ஸ்ரீவைகுண்டம் 19 கிமீ.
பேரூராட்சி அமைப்பு
21.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,792 ஆகும்[2]