கொல்லா
கொல்லா (Golla) :- ( గొల్ల వారు ):- கொல்லா நாயுடு (அல்லது) நாயக்கர் இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1911 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் இவர்கள் 15,38,031 பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது[1].ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் கம்பள நாட்டில் இருந்து வந்ததால் ராஜகம்பளத்தார் எனவும் அழைக்கப்படுகின்றனர் .மேலும் கொல்லவாரு என்று தெலுங்கு மக்களால் அழைக்கப்படுகின்றனர் (கொல்லா+வாரு=கொல்லவார்) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள்.
![]() ![]() ![]() ![]() ![]() | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1.5 கோடி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, புதுச்சேரி, கேரளம் | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு | |
சமயங்கள் | |
![]() | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர் |
பூர்வீகம்

மகாபாரதத்தில் வரும் யவதி ராஜா மரபினராகவே கொல்லா மற்றும் இவர்களின் கிளை சாதிகளைக் கூறுகின்றனர். யவதி ராஜாவுக்கு 6 மகன்கள். அதில் கடைசி மகனாகிய கரியவாலாவுக்கு ஒரு மகன். அவரின் பெயர் ஆவுழு அமிர்த்தமையா. இவருக்கு ஒலி ராஜு என்றும் சிம்ஹாதிரி ராஜு என்றும் மகன்கள் இருந்தனர். இந்த மரபில் வந்தவர்கள் பெத்த ராஜு, எருனுக்கா ராஜு, நலனுக்கா ராஜு, போல ராஜு என்பவர்கள். கொல்லா இனத்தவர்கள் மகாபாரதத்தில் வரும் இந்த ராஜாக்களின் வாரிசுகளாக தங்களைக் கூறுகின்றனர் .மேலும் கொல்லவார்கள் ஸ்ரீ கிருஷ்ணர் வழிவந்த அஹீர் (ஆயர்) சமுகத்தினர் ஆவர். சந்திர வம்ச க்ஷத்திரியர்கள் கொல்லா ராஜகம்பளத்தார்.
பிரிவுகள்
கோபாலா (பசுக்களைக் காக்கும் பொறுப்பு கொண்டோர் ) என்பதில் இருந்து கொல்லா வந்ததாக அறியப்படுகிறது. இவர்கள் தமிழில் கோனாருழு என்றும் அழைக்கபடுகின்றனர்.
- அஸ்தாந்திர கொல்லா
- மொன் கொல்லா
- காடு கொல்லா
- ஊரு கொல்லா
- துமாட்டி கொல்லா[2]
- பூஜா கொல்லா
- கர்ண கொல்லா
- பத்ர கொல்லா
- போகநாட்டி கொல்லா
- எர்ர கொல்லா
- தொட்டிய நாயக்கர்[3]
- பாலவார்[4]
- மேகலவார்
- தொக்கல கொல்லா[5]
- குரும(குறும்ப) கொல்லா[6]
- சில்லவார் (பசுவின் கன்றுகளை கொண்டவர்கள்).
இவர்களில் காடு கொல்லா என்பவர்கள் கங்கை நதி தீரத்தில் இருந்து வந்ததாகவும், ஊரு கொல்லா என்பவர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் எந்த திருமண பந்தமும் கிடையாது. அஸ்தாந்திரம் என்றால் நீதிமன்றம் என்று பொருள்படுவதால் இந்த பிரிவினர் ஆதியில் கொல்லா இனத்தவர்களுக்கு நீதி சொல்லும் மக்களாக இருந்திருப்பார்கள் எனப்படுகிறது. துமாட்டி கொல்லா பண்டைய பெல்லாரியை (கம்பளி தேசம்)பூர்வீகமாக கொண்டவர்கள். கொல்லாக்கள் ஆநிரைகளை மேய்ப்பது சமூக தொழிலாக கொண்டாலும் போர் மரபினர் எனவே இவர்கள் பெரும் மன்னர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்து வந்துள்ளனர் .
வரலாறு
கொல்லா சமுகத்தினர் தேவகிரியில் 13ம் நூற்றாண்டில்(1294) இஸ்லாமிய படையெடுப்பால் அரசை இழந்த பிறகு காகத்திய அரசில் சிற்றரசர் களாகவும்,தளபதிகளாகவும் பணி அமர்த்தப்பட்டனர் இதில் ஹரிஹரர் மற்றும் புக்கரும் அடக்கம்.பின்பு காகத்தியர்களும் வீழ்த்தப்பட்டனர் இதன் விளைவாக சுல்தான்களால் ஹரிஹரர் மற்றும் புக்கர் சிறையில் அடைக்கப்பட்டு மதம் மாற்றப்பட்டனர்.பின்பு கம்பள நாட்டில் உள்ள கொல்லாகளை புரட்சி செய்யாமல் தடுக்க சுல்தான் ஹரிஹரர்,புக்கரை கம்பள நாட்டின் ஆளூநர்களாக நியமத்தார். இதை ராபர்ட் சீவெல் அப்போதைய மதராஸ் மாகாண அரசு ஆவணத்தில் பதிவு செய்தார்.
சான்று: Vijayanagar: As Seen by Domingos Paes and Fernao Nuniz (16th Century Portuguese Chroniclers and Others)
விஜயநகரப்பேரரசை நிறுவுதல்

சிருங்கேரி மடாதிபதி வித்யாரண்யர் அவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கரை மீண்டும் வைணவ மதத்திற்கு மாற்றினார். புரட்சிகர கருத்துக்களை கூறி அப்பகுதி மக்களை படைதிரட்ட ஹரிஹர,புக்கருக்கு அவர் உதவினார்.இதன் விளைவாக 1336ல் விஜயநகரம் ஹம்பியை தலை நகராக கொண்டு உருவானது[7].
குமார கம்பணன் விஜய நகரப் பேரரசைச் சேர்ந்த மன்னனாவான். கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ கொல்லா சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் முகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் மதுரா விஜயம் என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்[8].
பலிஜா பிரிவு உருவாக்கம்
விஜயநகர அரசர், கிருஷ்ணதேவராய காலத்தில் 'பலிஜா' எனும் பட்டத்தின் கீழ் இடங்கை சாதிகளான கொல்லா (Gollas) , கவரை எனும் கவரா (Gavaras), மற்றும் பலரை திரட்டி பலிஜா என்னும் வணிக பிரிவை உண்டாக்கினார்:[9]
மதுரை நாயக்க அரசை நிறுவுதல்

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் அரசிகளின் சமுகமான காப்புகளுக்கு ஆட்சித்துறையில் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டது இதனால் விஜயநகரத்தை உருவாக்கிய கொல்லவார்கள் செல்வாக்கு இழந்தனர்.எனவே கொல்லவார்களின் தலைவரான மகாமண்டலேசுவரர் நாகம நாயக்கர் கோபமுற்று தக்க சமயத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.இக்காலக்கட்டத்தில் தான் மதுரையில் விஜயநகருக்கு பணிந்த பாண்டிய அரசுக்கும் சோழ அரசுக்கும் கலகம் மூண்டது.கலகத்தை அடக்கி பண்டியனுக்கு நாட்டை மீட்டு தர ராயர் நாகம்மரை பணிந்தார்.மதுரை சென்று வெற்றி கொண்ட நாகமர் மதுரையை பண்டியனுக்கு தர மறுத்தும் மதுரையை கொல்லவார் நாடாக்கவும் வேண்டி கலகம் செய்தார்.எனவே,ராயர் நாகமரை வென்று வர நாகமரின் சொந்த மகன் விஸ்வநாத நாயக்கரை அனுப்பினார். விஸ்வநாதன் தன் தந்தையை வென்று ராயர் முன் நிறுத்தினார்.ராயர் விஸ்வநாதனின் விஸ்வாசத்தை மெச்சி மதுரையை விஸ்வநாத நாயக்கருக்கே அளித்தார். மதுரையில் கம்பளத்து நாயக்கர் ஆட்சி 1529ல் நிறுவப்பட்டது[10]:கம்பளத்தார்களுக்காக நிறுவப்பட்டதால் பெரும்பாலான பாளையங்கள் கம்பளத்தாருக்கு தரப்பட்டது மற்றும் ஓர் சிறப்பு "மதுரை ராஜ்ஜிய கொடியில் கம்பளத்தார்களின்" "பொலி ஆவு" (புனித ரிஷபம்) பொறிக்கப்பட்டது.[11]
கொல்லா கம்பள பாளையங்கள் (ஜமின்)
தமிழக பாளையக்காரர்கள்[12]:
- ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்
- தேவாரம்
- போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
- பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர்
- எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
- அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர்
- அம்பாத்துரை - மாக்கள நாயக்கர்
- தவசு மடை - சுடலை நாயக்கர்
- எம்மகலாபுரம்
- மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
- மதூர்- வேங்கடசாமி நாயக்கர்
- சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
- ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர்
- பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
- இடைய கோட்டை - மம்பார நாயக்கர்
- மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
- பழனி - வேலையாத நாயக்கர்
- ஆயக்குடி - கொண்டாம நாயக்கர்
- விருபாக்ஷி - குப்பால நாயக்கர்
- கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
- நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர்
- எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர்
- காடல்குடி
- குளத்தூர்
- மேல்மாந்தை
- ஆற்றங்கரை
- கோலார்பட்டி
- கடம்பூர்
- ஊற்றுமலை ஜமின்
- தொட்டப்ப நாயக்கனூர்
- கம்பம்
- காசியூர்
- வாராப்பூர்
- ஆத்திப்பட்டி
- கண்டவநாயக்கனூர்
- தும்பிச்சி நாயக்கனூர்
- நத்தம்
- சக்கந்தி
- பெரியகுளம்
- குருவி குளம்
- இளசை
- மதுவார்பட்டி
- கோம்பை
- வடகரை
- மலயபட்டி
- ரோசலை பட்டி
- படமாத்தூர்
- எழுமலை
- சுரண்டை
- நிலகோட்டை
- முள்ளியூர்
கோப்பைய நாயக்கனூர்-கோப்பைய நாயக்கர்
ஆந்திர பாளையக்காரர்கள்[13]:
- கோத்தகோட்டா - பெருமப்ப நாயர்
- கப்பத்ராலா - சோட்டா மடப்ப நாயர்
- துடிகொண்டா - முல்லப்ப நாயர்
- பன்டிகோனா - ராம நாயர்
- பண்டிகோன - வெங்கடப்ப நாயுடு
- மத்திகெரா - மல்லிகார்ஜுன நாயுடு
- அஷ்பரி - குர்ஜிஜி எல்லவ ராயுடு
- யகர்லபாளையம் - புருஷராம நாயுடு
- மண்டபம்பாளையம் - போகி எல்லன் நாயுடு
- ஜனுலாவரம் - பசிவி நாயுடு
- பலகொண்டாபனயனிபள்ளி - மச்சினெனி கொண்டப்ப நாயுடு
- புத்தூர்பாளையம் - புலிப்சி நாயுடு
- கோனராஜூபாளையம் - எர்ரபசிவி நாயுடு
- தொண்டூர் - பெத்த கோபால நாயுடு
- செனுமும்பள்ளி - பாப்ப நாயுடு
- கொண்டாரெட்டிபள்ளி - திம்மள நாயுடு
- கோதகோட்டா - சின்ன கோபால் நாயுடு
- தாசரிபள்ளி - வீரனெகினி சித்தப நாயுடு
- யகர்லபாளையம் - வித்தலபதி நாயுடு
- முடிரெட்டிபாளையம் - பெத்த நாகப்ப நாயுடு
திருமண முறை
திருமணங்களில் பொதுவாக பிராமணர்களைக் கொண்டு இவர்கள் திருமணம் செய்வது கிடையாது ஆனால்,ஆந்திர கொல்லாக்களிடம் பிராமணர் கொண்டு திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. ஊருக்கு வெளியில் மர இலையினால் பந்தல் அமைத்து அதிலேயே திருமணம் செய்கின்றனர். இதனை இவர்கள் திருமண மந்தை என்று கூறுகின்றனர். கோவை,சென்னை,காஞ்சிபும்,திருவள்ளூர்,வேலூர்,வட ஆற்காடு மாவட்டம் போன்ற இடங்களில் தாலி கட்டும் முறை இருகின்றது ஆனால் பிற பகுதிகளில் தாலி கட்டும் வழக்கத்தை மேற்கொள்ளதவர்களாக இருக்கின்றனர். ஊர் நாயக்கர் என்ற ஒருவரை இவர்களே தேர்ந்து எடுத்து அவரின் முன்னிலையில் திருமணம் நடக்கின்றது. வரதட்சணை சில பிரிவுகளிடம் மட்டுமே வழக்கில் உள்ளது. ஆண்களுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை உண்டு ஆனால் பெண்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது . இவர்களின் இனமான பிற தெலுங்கு கொல்லா,காப்பு ,கம்மா,கவரா போன்ற சமுதாயத்தவரிடம் திருமணம் பந்தம் செய்து கொள்கின்றனர்[14]
நெருங்கிய தொடர்புடைய சாதிகள்
வடுகர்கள்:[15]
- காப்புகள் வேளாண் சமுகமக்கள்.
- கொல்லா,எர்ர கொல்லா கம்பளத்தார்கள் மேச்சல் சமுகமக்கள்[16]
- எட்கர் துர்ஸ்டன் தனது "CASTE AND TRIBES OF SOUTH INDIA"வில் கவரா நாயுடு அக்காலத்தில் பூணூல் அணிந்தனர் என்றும் ஆனால் மதுரை நாயக்கர்களின் வாரிசுகள் பூணூல் அணிவதில்லை என கூறி மதுரை நாயக்கர்கள் கம்பளத்தார்கள் என்னும் கருத்துக்கு வலுசேர்த்தார் மேலும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற காவல்கோட்டமும் பல ஆதாரங்களூடன் நிறுவுகிறது.இருப்பினும் மதுரை அரசிகள் இராணி மீனாட்சி வரை அனைத்து அரசிகளும் கவரா,காப்பு இனத்தவர்களே. தற்காலத்தைய geneology மரபணுவியல் படி சமிபத்தில் இரத்த மாதிரிகளை கொண்டு RESEARCH GATE என்னும் அமைப்பு ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது அதன்படி கொல்லா மற்றும் காப்பு மிக நெருங்கிய ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் என்று நிறுவியுள்ளனர்[17].
சமுதாய நிலை
கொல்லா இனத்தவர்களின் இயல்புகளை தனது நூலில் எட்கர் துர்ச்டன் எழுதி உள்ளார். சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இந்த சமுதாய மக்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் காப்பு , கம்மவர் , பலிஜா நாயுடு சமுதாயத்தவரிடம் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு நெருங்கிய மக்கள். பிராமணர்கள் இவர்கள் இடத்தில் எந்தப் பொருளையும் வாங்குவர் . சதாத ஸ்ரீ வைஷ்ணவ என்ற மரபினரையே தங்கள் திருமணங்களை நடத்த பணிப்பர். காப்பு இனத்தவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தப் பாகுபாடும் கிடையாது . இவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவகளை ஜாதி பெத்த என்ற சாதிப் பெரியவரின் முன்னிலையில் தீர்த்து வைக்கின்றனர்.வார்ப்புரு:Cm
குல மரபுகள்
இவர்களுக்குள் நடக்கும் எந்த முக்கிய நடைமுறையையும் தங்கள் ஊர் பெரியவர் முன்னிலையில் தான் நடத்துகின்றனர். இவர்களைக் கம்பளத்தார்கள் என்றும் அழைக்கின்றனர் . கம்பளதார்களுக்கு அதிகமான நிலம் இருக்கும் . இவர்கள் ரேணுகா தேவி, முனீஈஸ்வரர், திருமால் , சிவன், ஜக்கம்மா, மல்லண்ணா, அழகர், போலேரம்மா போன்ற குல தெய்வங்களை வணங்குகின்றனர். இவர்கள் வட தமிழகத்தில் அதிகம் உள்ளதால் பச்சையம்மன் விழா , திரௌபதி அம்மன் விழா முதலியவற்றைச் சிறப்பாக செய்கின்றனர் . இவர்களின் விழாக்களில் தெலுங்கில் பாடல்கள் பாடுகின்றனர் .
குறிப்பிடத்தக்க நபர்கள்
சரித்திர காலத்தவர்கள்
1 ஹரிஹரர்
2 புக்கர்
6 ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்[18][19]
13 விருப்பாச்சி கோபால் நாயக்கர்
14 ஊமைத்துரை
சமுக போராளிகள்
1 சங்கொலி ராயண்ணா (சுதந்திர போராட்ட தியாகி, கர்நாடகா)
2 தொட்டி கொமரய்யா (பழங்குடி மக்களின் உரிமைகாக போராடிய வீரர், தெலங்கானா)
அரசியல்
1 கி.வீரமணி (திராவிடர் கழகம்)
2 சித்தராமையா (கர்நாடகா முதல்வர்)
3 யணமல ராமகிருஷ்ணுடு (தெலுகு தேசம் கட்சி அவைத்தலைவர்,சட்டபேரவை தலைவர்) (முன்னாள் நிதி அமைச்சர், ஆந்திரப்பிரதேசம்)
4 படுகுல லிங்கையா (ராஜ்யசபா எம்பி, தெலங்கானா)
5 பண்டாரு தத்தாத்ரேயா (இமாச்சல பிரதேச ஆளுநர்)
6 சத்தியநாராயணன் (தி.நகர், எம்.எல்.ஏ)
7 அனில் குமார் (வேளாண்துறை அமைச்சர், ஆந்திரா)
8 தெலசனி சீனிவாஸ் (திரைப்படத்துறை அமைச்சர், தெலங்கானா)
9 ஏ.சக்ரபாணி (முன்னாள் சட்டப்பேரவை தலைவர்,ஆந்திரப்பிரதேசம்)
10 கொ.நாகராஜ் (விடுதலை களம் நிறுவனர், தலைவர்)
முக்கிய பிரமுகர்கள்
1 ரயாங்க கிருஷ்ணய்யா (அனைத்து இந்திய பிற்படுத்தபட்டோர் ஆணையம் தலைவர்)
2 ஜங்க கிருஷ்ணமூர்த்தி (ஒய்.எஸ்.ஆர்.சிபி. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்)
மேற்கோள்கள்
- "Castes and Tribes of Southern India - Wikisource, the free online library".
- "Castes and Tribes of Southern India/Dhūdala - Wikisource, the free online library".
- "Castes and Tribes of Southern India/Tottiyan - Wikisource, the free online library".
- "The Madura country a manual".
- "History of the Nayaks of Madura".
- Comprehensive History and Culture of Andhra Pradesh p 15 M. L. K. Murty, Dravidian University - 2003 -"In addition to Scheduled Tribes, there are other social groups, like Golla, Kuruba, Kuruva and Kuruma, whose traditional economy is predominantly sheep/goat herding and cattle pastoralism."
- "Robet sewell".
- "குமார கம்பணன்".
- Velcheru Narayana Rao; David Dean Shulman, Sanjay Subrahmanyam (1992). Symbols of substance: court and state in Nāyaka Period Tamilnadu. Oxford University Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563021-1. "These left-Sudra groups — often referred to by the cover-title 'Balija', but also including Boyas, left-hand Gollas, Gavaras, and others - were first mobilized by Krishnadevaraya in the Vijayanagara heyday...These Balija fighters are not afraid of kings: some stories speak of their killing kings who interfered with their affairs""
- "காவல் கோட்டம்".
- "காவல் கோட்டம்".
- "[http://vget.org/wp-content/uploads/2014/04/poligar_systein_Tamil_Country.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjADegQIBBAB&usg=AOvVaw1yeo1jZw56OYWTxBoHy4tc vget.org › uploads › 2014/04PDF The Poligar System in the Tamil Country : Its Origin and Growth. - VGET]".
- "[http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/62877/8/08_chapter%25203.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjACegQIBhAB&usg=AOvVaw3i2WNEQIzrwvdiE-F_dBqw shodhganga.inflibnet.ac.in › ...PDF origin and development of the palegar system - Shodhganga]".
- "Castes and Tribes of Southern India/Golla - Wikisource, the free online library".
- "The Madura country a manual".
- "மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)".
- "Figure 3. The neighbor-joining tree (constructed on the basis of F ST..." (en).
- "AMUKTAMALYADA".
- "Krishnadevaraya | Sulekha Creative".
21 Golla subcastes https://sg.inflibnet.ac.in/jspui/bitstream/10603/249829/6/06%20chapter-iii.pdf
23. https://en.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India/Kollar
24. எட்கர் த்ருச்டன் எழுதிய தென் இந்திய குலங்கள்
25. தென் இந்திய பழங்குடி மரபினர்
26. Indian census 1911 https://dspace.gipe.ac.in/xmlui/bitstream/handle/10973/18956/GIPE-016854.pdf?sequence=3&isAllowed=y