தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில்

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):தண்டலை நீள்நெறி
பெயர்:தண்டலை நீள்நெறி அக்னீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தண்டலைச்சேரி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீள்நெறிநாதர்
தாயார்:ஞானாம்பிகை
தல விருட்சம்:குருந்தை
தீர்த்தம்:ஓமக தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 110ஆவது சிவத்தலமாகும்.

முக்தி பெற்றோர்

இத்தலத்தில் அரிவாட்டாய நாயனார் முத்தி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. அரிவாட்டாய நாயனார் அவதாரத் தலம்[1] இதே ஊரில் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் எனும் மற்றோர் சிவத்தலமும் உள்ளது

தலவரலாறு

ஆமை அவதாரம் எடுத்த திருமால் செருக்கால் கடலைக் கலக்கிய போது சிவபெருமான் ஆமையைக் கொன்று ஆமை ஓட்டினை அணிந்தருளிய தலம்.

நூல்கள்

இத்தல இறைவனாரைப் பற்றி படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலை நீள்நெறி எனும் சதக நூல் ஆகும்.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 266

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.