சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில்

சூலமங்கலம் கிருத்திவாகேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

இக்கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை அருகே ரயில் நிலைய சாலை அருகே 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சூலத்தேவர் வழிபட்டு சுய உருவம் பெற்றதால் சூலமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. [2] இத்தலத்தை சூலமங்கை என்றும் அழைப்பர்.

இறைவன்

தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக வேள்வி மூலமாக அனுப்பப்பட்ட யானையின் உடலில் புகுந்து அதனைக் கிழித்து வெளியே வந்ததால் வேழம் உரித்த வித்தகராக இருப்பதால் கிருத்திவாகேசுவரர் என்றழைக்கப்படுகிறார். [2]

சப்தஸ்தானத் தலம்

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில் கௌமாரி வழிபட்ட தலமாகும். [2] இப்பகுதியில் சப்தஸ்தானத் தலமாகக் கருதப்படும் கீழ்க்கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இவை சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பகுப்பில் அடங்கும் கோயில்களில் உள்ள இறைவனும், இறைவியும் கீழ்க்கண்டவர் ஆவர்.

  • திருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி
  • அரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை
  • சூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி
  • நந்திமங்கை - ஜம்புகேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி
  • பசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி
  • தாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி
  • புள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.