மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
புதிய பாப்புவைத் தேர்ந்தெடுக்க, கர்தினால்களுக்கு பத்து வாரம் தேவைப்பட்டன. இங்கிலாந்து கர்தினாலான ரெஜினால்ட் போல் என்பவரை புதிய பாப்புவாக தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர் மிகுந்த தாழ்மையுடன், தம்மைப் பாப்புவாக தேர்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனவே, இத்தாலிய கர்தினால் ஜான் மோன்டி என்பவரை புதிய பாப்புவாகத் தேர்தெடுத்தனர். 1550 பிப்ரவரி 22இல் பணியேற்றபோது, மூன்றாம் ஜீலியஸ் என்று பெயர் சூடிக்கொண்டார்.
திருத்தந்தை மூன்றாம் ஜூலியுஸ் | |
---|---|
![]() ![]() | |
ஆட்சி துவக்கம் | 7 பெப்ரவரி 1550 |
ஆட்சி முடிவு | 23 மார்ச் 1555 |
முன்னிருந்தவர் | மூன்றாம் பவுல் |
பின்வந்தவர் | இரண்டாம் மர்செல்லுஸ் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 12 நவம்பர் 1514 Antonio Maria Ciocchi del Monte-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 22 டிசம்பர் 1536 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஜொவான்னி மரியா சியோக்கி தெல் மோந்தே |
பிறப்பு | செப்டம்பர் 10, 1487 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் |
இறப்பு | 23 மார்ச்சு 1555 67) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
ஜூலியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
அரசன் 8-ஆம் ஹென்றி இறந்தபின், அவரின் மகள் மேரி, இங்கிலாந்தின் அரசியானார். கேண்டர்பரியின் பேராயராக கர்தினால் போல் ஐ பாப்பு நியமித்தார். இவர்தான் கேண்ட்ர்பரியின் கடைசி பேராயர். இங்கிலாந்து திருச்சபையில் ஏற்பட்ட பிளவினால் புதிதாக உருவான 'புரொட்டஸ்டான்ட்' என்ற பிரிவினைச் சபையையும் கத்தோலிக்கத் திருசபையையும், இவரால் சமரசப்படுத்த முடியவில்லை.
எதையும் சாதிக்க முடியாத நிலையில், ஐந்தாண்டுப் பணிப் பொறுப்பிற்குப்பின் 1555 மார்ச் 25ல் ஜீலியஸ் பாப்பு காலமானார்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் மூன்றாம் பவுல் |
திருத்தந்தை 7 பெப்ரவரி 1550 – 23 மார்ச் 1555 |
பின்னர் இரண்டாம் மர்செல்லுஸ் |