பதினான்காம் யோவான் (திருத்தந்தை)

திருத்தந்தை பதினான்காம் யோவான் (இறப்பு: ஆகத்து 20, 984) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர், 983 முதல் ஆகத்து 20, 984, வரை இருந்தவர். இவர் திருத்தந்தை ஏழாம் பெனடிக்ட்டுக்குப் (974–983) பின்னவர் ஆவார்.

பதினான்காம் யோவான்
ஆட்சி துவக்கம்டிசம்பர் 983
ஆட்சி முடிவுஆகத்து 20, 984
முன்னிருந்தவர்ஏழாம் பெனடிக்ட்
பின்வந்தவர்பதினைந்தாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்பேயிட்ரோ கெயின்பனோவா
பிறப்பு???
பவியா, இத்தாலி
இறப்புஆகத்து 20, 984(984-08-20)
உரோமை நகரம், புனித உரோமைப் பேரரசு
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

இவர் பவியாவில் பிறந்தவர். திருப்பீட தேர்வுக்கு முன் இவர் அரசன் மூன்றாம் ஓட்டோவின் (Otto II 973–983) அரச வேந்தராக (imperial chancellor of emperor) இருந்தவர். இவர் அரசன் ஓட்டோவின் இரண்டாம்பட்ச நியமனம் ஆவார்.

இவரின் இயற்பெயர் பேயிட்ரோ கெயின்பனோவா, புனித பேதுருவோடு தன்னை குழப்பிக்கொள்ளாமல் இருக்க யோவான் என்னும் பெயரை ஏற்றார்.

இவரின் தேர்வுக்கு பின் இரண்டாம் ஓட்டோ இறந்தார். ஓட்டோவின் மகன் (Otto III) மூன்று வயதே நிறைவுற்றிருந்ததால், காண்ஸ்டான்டினோபிலில் இருந்து திரும்பி வந்த எதிர்-திருத்தந்தை ஏழாம் போனிஃபாஸால் (Antipope Boniface VII), இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் பட்டினியாலோ அல்லது நஞ்சு கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம்.

மேற்கோள்கள்

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "John XIV (pope)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஏழாம் பெனடிக்ட்
திருத்தந்தை
983–984
பின்னர்
பதினைந்தாம் யோவான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.