இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.

இரண்டாம் அனஸ்தாசியுஸ்
ஆட்சி துவக்கம்24 நவம்பர் 496
ஆட்சி முடிவு19 நவம்பர் 498
முன்னிருந்தவர்முதலாம் ஜெலாசியஸ்
பின்வந்தவர்சிம்மாக்குஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்Anastasius
பிறப்பு???
???
இறப்புநவம்பர் 16, 498(498-11-16)
ரோம், ஒஸ்ட்ரோகோதிக் அரசு
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்ததால், வரலாற்றாசிரியர்களால் (Liber Pontificalis) திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை தான்தே, நரகத்திலிருப்பதாக தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார்.[1]

வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் (Richard P. McBrien) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.[2]

References

  1. Chisholm, Hugh, ed (1911). "Anastasius". Encyclopædia Britannica (Eleventh ed.). Cambridge University Press.
  2. McBrien. Lives of the Popes (San Francisco, Harper, 2000) p. 82–83.

வெளி இணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் ஜெலாசியஸ்
திருத்தந்தை
496–498
பின்னர்
சிம்மாக்குஸ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.