பெரியாற்றுத் தேசியப் பூங்கா

பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் பரவியுள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர்கள். இதில் 350 ச.கி.மீ பெரியாறு வனவிலங்குக் காப்பகமாக (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது.

பெரியாறு தேசியப்பூங்கா
பெரியாறு ஏரி
அமைவிடம்இடுக்கி, இந்தியா
கிட்டிய நகரம்கொச்சி, இந்தியா
ஆள்கூறுகள்9°28′0″N 77°10′0″E
பரப்பளவு305 கிமீ²
நிறுவப்பட்டது1982
வருகையாளர்கள்180,000 (in 1986)

உயிரின வளம்

இப்பகுதியில் 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

பெரியாறு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.