தொகை அடியார்கள்
தொகை அடியார்கள் என்போர் திருத்தொண்டர்த் தொகை நூலில் சுந்தரமூர்த்தி பெருமான் குறிப்பிட்டுள்ள சைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு காலம், இடம் மற்றும் சமயம் இல்லை. சைவ சமயத்தின் மூலமுதற் கடவுளான சிவபெருமானை திருத்தொண்டர் தொகை இயற்றப்படும் முன்னும், அக்காலத்திலும், அதன் பின்னும் வாழ்ந்த சிவனடியார்களை குறிக்க தொகை அடியார்கள் என்று கூறுகின்றனர்.[1] இவர்களில் சிலருடைய பண்புகளையும், தோற்றத்தையும், செயல்பாடுகளை வைத்தும் கீழ்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர்.
- தில்லை வாழ் அந்தணர்
- பொய்யடிமையில்லாத புலவர்
- பத்தராய்ப் பணிவார்கள்
- பரமனையே பாடுவார்
- சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
- திருவாரூர்ப் பிறந்தார்
- முப்போதும் திருமேனி தீண்டுவார்
- முழுநீறு பூசிய முனிவர்
- அப்பாலும் அடிசார்ந்தார்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.