தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்)

தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரத்தில் உள்ளது. இக்கல்லூரி, 'ஜான் போஸ்கோ சலேசிய சபையினரால்' நடத்தப்படும் ஓர் கல்விக் கூடமாகும். இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட முதல்தரக் கல்லூரியாகும். எசுப்பானிய பாதிரியார் ஜோசெப் கரீனோ என்பவரால் 1951-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[1].

தூய நெஞ்சக் கல்லூரி

நிறுவல்:1951
வகை:சிறுபான்மையினர் கல்லூரி
அமைவிடம்:திருப்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:http://shctpt.edu

மேற்கோள்கள்

  1. "Sacred Heart College". பார்த்த நாள் 2013-07-28.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.