தஞ்சாவூர் மேலவாசல் சுப்பிரமணியர் கோயில்

தஞ்சாவூர் மேலவாசல் சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும்.

கோயில் முகப்பு

அமைவிடம்

இக்கோயில் மேலவீதியின் அருகே மேல் வாசலில் கொங்கனேசுவரர் கோயிலுக்குப் பின் புறம் உள்ளது. இக்கோயிலின் இடது புறம் ரெங்கநாதர் கோயில் உள்ளது.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

மூலவர்

மூலவர் சன்னதியில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

அமைப்பு

விமானம்

நுழைவாயில், மண்டபம், மூலவர் கருவறை, விமானம். திருச்சுற்று ஆகிய அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. 18 படிகளை ஏறி மேலே செல்லும் வகையில் அமைந்துள்ள இக்கோயிலில் சாலை உயர்ந்ததன் காரணமாக மூன்று படிகள் கீழே சென்றுவிட்டதாகக் கூறினர். 15 படிகளைக் கடந்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது. உயர்ந்த தளத்தினைக் கடந்து மேலே செல்லும் போது முன்னர் மண்டபம் காணப்படுகிறது. அம்மண்டப இடப்புறத்தில் காசி விசுவாதர், விசாலாட்சி உள்ளனர். அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. மூலவருக்கு முன்பாக வலப்புறம் விநாயகர், இடப்புறம் இடும்பன் உள்ளனர். மூலவருக்கு முன்பாக பலிபீடமும் முருகனின் வாகனமாக மயிலும் உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், நாகர்கள் உள்ளனர். யாழி கச்சையணிந்த கோலத்தில் மற்றொரு முருகன் சிலை திருச்சுற்றில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.21
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur Sl.No.21
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.