தஞ்சாவூர் கோவிந்தராஜப் பெருமாள் கோயில்
தஞ்சாவூர் கோவிந்தராஜப் பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நாலு கால் மண்டபம் அருகே அமைந்துள்ளது.
கோவிந்தராஜப் பெருமாள் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோவிந்தராஜப் பெருமாள் (ரெங்கநாதர்) |
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]
மூலவர்
இக்கோயிலின் மூலவராக ரெங்கநாதர் உள்ளார். இறைவி ரெங்கநாயகி ஆவார்.
அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கருடாழ்வார் உள்ளனர். மூலவர் சன்னதியில் பெருமாள் கிடந்த நிலையில் உள்ளார். மூலவர் கோவிந்தராஜப்பெருமாள் என்றும் ரெங்கநாதர் என்றும் என்றழைக்கப்படுகிறார். அனுமார், விநாயகர் உள்ளிட்ட பல தெய்வங்கள் தனியாக ஒரு சன்னதியில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.