ஜோ டி குரூஸ்
ஜோ டி குரூஸ் (ஜோ டி க்ரூஸ்) ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை இராயவரம் பகுதியைச் சேர்ந்த இவர் பொருளாதாரத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கப்பல் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். “புலம்பல்கள்” எனும் கவிதை நூல் 2003ல் வெளியாகியுள்ளது.

ஜோ டி குரூஸ்
இளமைக் காலம்
திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் கொற்கை என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். இவர் சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை தமிழ் பட்டம் பெற்றூள்ளார். அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மேலும் 2013ல் வெளியான மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
படைப்புக்கள்
- ஆழி சூழ் உலகு (நாவல்)
- கொற்கை சாகித்திய அகதமி விருது -2013
- அஸ்தினாபுரம் (நாவல்)
- வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)
- புலம்பல்கள் (கவிதை)
- விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்)
- எனது சனமே (ஆவணப்படம்)
- இனையம் துறைமுகம் (ஆவணப்படம்)
விருதுகள்
- இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.[1]
- இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மேற்கோள்கள்
- "'கொற்கை' நாவலுக்காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது". செய்திகள்.காம் (19 திசம்பர் 2013). பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.