சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்
சிறப்புப் பாயிரம் பிறர் செய்யக் காரணம் யாவை என்று நன்னூல் சில குறிப்புகளைத் தருகிறது.
காரணம்
ஒரு நூலின் சிறப்புப் பாயிரத்தை அந்நூலாசிரியரல்லாத வேறொருவர் செய்யவேண்டியதன் காரணமாக நன்னூல் தரும் விளக்கம்:
- ”இதுவரை வெளிப்படாமல் இருந்த சிறந்த நுட்பங்கள் எல்லாம் விளங்குமாறு, பல்துறை அறிவோடு சிந்தித்து, விரிவாக ஒரு நூலை எழுதினாலும் அதை எழுதியவன் தன்னைப்பற்றித் தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது. எனவே சிறப்புப்பாயிரம் பிறரால் செய்யப்படல் வேண்டும்”. [1]
அடிக்குறிப்புகள்
-
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே. - நன்னூல் 52
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.