எழுமதம்
எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.
- பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்
- அக்கொள்கையில் தவறு கண்டறிந்து மறுத்தல்
- முதலில் உடன்பட்டு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்தல்
- தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல்
- இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல்
- பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல்
- பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே கொள்ளுதல்
இவ்வேழினையும் ஏழுமதங்களாக நன்னூல் சுட்டுகிறது [1]
அடிக்குறிப்புகள்
- எழுவகை மதமே யுடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூல் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. - நன்னூல் 11
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.