காந்தாரம்

காந்தாரம் (ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் தொடங்கி "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.

காந்தாரம்
کندهار
இரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்

ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
நாடுஆப்கானிஸ்தான்
மாகாணம்கந்தகார் மாகாணம்
ஏற்றம்1,005
மக்கள்தொகை (2006)
  மொத்தம்4,50,300
நேர வலயம்ஆப்கானிஸ்தான் நேர வலயம் (ஒசநே+4:30)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.