முதல் நூல்

தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். [1] [2] நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல்.

முதல்நூல்

முதல்நூல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது.[3] [4]

அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன். [5] ஆள்வினை [6], ஊழ்வினை [7], சூழ்வினை [8] எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன் இந்த முனைவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்.

நன்னூலை நோக்கத் தொல்காப்பியம் ஒரு முதல்நூல்.

அடிக்குறிப்பு

  1. மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
    உரை படு நூல்தாம் இரு வகை இயல
    முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  2. முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் உரை (நன்னூல் 5)
  3. வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
    முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் (தொல்காப்பியம் 3-640)
  4. அவற்றுள்,
    வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
    முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் (நன்னூல் 6)
  5. ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்
  6. முயற்சி
  7. தலைவிதி
  8. சூழ்ச்சி செய்து ஏமாற்றும் வினை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.