மணிப்பூர் அரசு

மணிப்பூர் அரசு, இந்திய மாநிலமான மணிப்பூரின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை இம்பாலில் உள்ளன. அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். மாநிலத்தின் நீதித்துறைக்கு தலைமை வகிப்பது உயர்நீதிமன்றமாகும். இதன் கீழ் கீழ்நிலை நீதிமன்றங்களும் இயங்குகின்றன.[1]

மணிப்பூர் அரசு
தலைமையிடம்இம்பால்
செயற்குழு
ஆளுநர்சையது அகமது
முதலமைச்சர்ஓக்ரம் இபோபி சிங்
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சட்டமன்றம்
சபாநாயகர்தோக்சோம் லோகேஸ்வர் சிங்
மேலவைஇல்லை
நீதித்துறை
உயர் நீதிமன்றம்மணிப்பூர் உயர் நீதிமன்றம்

தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 60 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]

சான்றுகள்

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்த்த நாள் 2008-05-12.
  2. "Manipur Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்த்த நாள் 2008-05-10.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.