மணிப்புரி

மணிப்பூர் பிரதேசத்தில் ஆடும் நடனத்திற்கு மணிப்பூரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. மணிப்பூர் பிரதேசத்தில் மிகப் பழமையான மகிழ்விக்கும் ஒரு ஆடல் ஆகும். கிருஷ்ணராதா, கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் மற்றொரு ஆடல் "ராஸ்லீலா" ஆகும். இக்கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்புரி நடனம்

ராஸ்லீலா நடனங்கள் மணிப்புரி நடனத்தின் பட்டியலில் அடங்கும். நான்கு வகையான ராஸ்லீலா நடனங்கள் பின்வருமாறு: வஸந்தராஸ், குஞ்ஜ ராஸ், மஹாராஸ் மற்றும் நித்தியராஸ் ஆகியனவாகும்.

பாடும் முறையும், குரல்வள அபிவிருத்திப் பயிற்சி, வேறு நடனக் கலைக்கான இசையைப் போல் இல்லாமல் வேறு பட்டிருக்கும். பாடுபவரின் குரல் உச்ச சுருதியிலும் தெளிவாகவும் இருக்கும். பங்க், டோலக், டோல், கஞ்ஜூரி என்னும் நான்கு வகையான வாத்தியங்கள் இந்த நடனத்திற்கு பக்கவாத்தியங்களாக அமைகின்றன. தாள வகைகள் இந் நடனத்திற்கு உரித்ததாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.