திருவாடானை
திருவாடானை (ஆங்கிலம்:Tiruvadanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வருவாய் கோட்டம், திருவாடானை வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
திருவாடானை | |
— கிராமம் — | |
அமைவிடம் | 9°46′48″N 78°55′16″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | திருவாடானை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 1 (2001) |
பாலின விகிதம் | 1,083 ♂/♀ |
கல்வியறிவு • ஆண் |
71.77% • 65% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தொலைவு(கள்)
| |
குறியீடுகள்
|
அமைவிடம்
திருச்சிராப்பள்ளியில் இருந்து தென்கிழக்காக ஏறத்தாழ 125 கி.மீ. தொலைவிலும் இராமநாதபுரம் நகரில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
இந்த ஊரின் சங்ககாலப் பெயர் அட்டவாயில்.
சொற்பிறப்பியல்: திரு+ஆடு+ஆனை திரு, சொற்பொருளியல்: மேன்மை, தெய்வீகம் மற்றும் ஆடு +ஆனை(யானை) திரிந்து திருவாடானை ஆகியது.
பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை பின்வருமாறு: வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து சிவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார். ஊரும் அதே பெயரில் அழைக்கபடலாயிற்று.[4]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,88,013 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 71.77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். பரமக்குடி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சிறப்புக்கள்
சூரியனால் வழிபடப்பட்டதாக கருதப்படும் ஆடானை நாதர் கோவில் என அழைக்கபடும் சிவன் கோவில் இங்கு உண்டு.
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- திருவாடானை
- "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.